அந்தத் தவிட்டுக்குருவி இறந்து கொண்டிருந்தது - ஆசைத்தம்பி
வளர்ச்சியின் பெயரால் நடத்தப்படும் இயற்கையின் மீதான வன்முறைதான் மோசமான வன்முறை. இதைப்பற்றிய சிந்தனை மேலெழாமலிருக்க இங்கே மதமும், சாதியும் ஆட்சியாளர்களுக்கும், பெரும் நிறுவனங்களுக்கும் தேவைப்படுகிறது. யார் எப்படி மறைத்தால் என்ன சூழலியல் சீர்கேட்டின் பிரதிபலனை இங்கு அனைவரும் அனுபவித்தே ஆக வேண்டும். பாதிப்பின் அளவில் தான் இங்கு பெரியதொரு வித்தியாசம். வளரும் நாடுகளும், ஏழைகளும், அதிகாரமற்றவர்களும் அடையும் இன்னல்களை அதிகாரவர்க்கமும், பெரும்பணக்காரர்களும், வளர்ந்த நாடுகளும் எதிர்கொள்வதில்லை என்பது தான் நிதர்சனம். ஒரு சில புத்தகங்களை படிக்கும் போது மட்டும் மனம் ஏதோ கனத்துப் போகிறது. பரிமாண வளர்ச்சியில் மனித இனம் தோன்றியே இருக்கக்கூடாதோ என்ற எண்ணம் மேலோங்குகிறது. எல்லா மனிதர்களும் மோசமானவர்கள் இல்லையென்றாலும் சூழலியல் சிந்தனை கொண்டவர்கள் அரிதிலும் அரிதே. தே. ஆசைத்தம்பியின் அந்த தவிட்டுக்குரவி இறந்து கொண்டிருந்தது என்ற கட்டுரைத் தொகுப்பை படித்தேன். சுற்றுச்சூழல் பற்றிய 20 கட்டுரைகளும் 7 பறவைகள் பற்றியளவும் இறுதியில் கலைச்சொற்களும் கொண்ட தொகுதி. இயற்கையில் எதுவும் தனித்து இல்லை என்பது தான் ஆ...